Sunday, 16 November 2014

திருப்புகழ்அம்ருதம்

கைத்தலம் = கையில்.கைத்தலம் நிறைகனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடிபேணி கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரி தனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதிதீரா அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபம் ஆகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே